Friday, March 06, 2020

On Friday, March 06, 2020 by Tamilnewstv in    


திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

. "யுகா" அமைப்பு நிர்வாகி அல்லிராணி
 மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
  டாக்டர் ரமணி தேவி ,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
  டாக்டர் ரமணி தேவி பேசுகையில்,


 கொரோனா வைரஸ் நோய் தற்போது ஈரான், இத்தாலி, சீனா, கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

 கடந்த மாதம் சீனாவில் இந்த நோயால் தினமும் 3,500 பேர் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. தற்போது இந்த எண்ணிக்கை 300 ஆக குறைந்துள்ளது.
இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் காரணம். இந்நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறைகளை கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  குழந்தைகள், முதியவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்ற நோய்க்கு ஆளாகியவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கு சிகிச்சை முறை, மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள மூலிகை மருந்துகளுக்கு நிகராக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் மருந்துகள் உள்ளது. குறிப்பாக கொரோனா நோயை தடுக்க கை கழுவும் முறையை சிறந்த தடுப்பு முறையாகும். நமது நாடு தூசிகள் நிறைந்த நாடு. அதனால் கை கழுவும் பழக்கத்தை வழக்கமாக மேற்கொள்ளவேண்டும்.


நம் கைகள் மூலம் மூக்கு வாய் போன்றவற்றை அடிக்கடி தொடக்கூடாது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலவும் வெப்பநிலையில் கொரோனா நோய் பரவ வாய்ப்பு கிடையாது. 15 டிகிரி செல்சியஸ் இருந்தாலே கொரோனா கிருமி  அழிந்துவிடும். மூச்சுத் திணறல், உடல் வலி, தலைவலி, இருமல், சளி போன்றவை இந்நோய்க்கான அறிகுறியாகும். இத்தகைய அறிகுறி இருந்தாலே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோய் தாக்குதல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து உயிர் இழப்பை சந்திக்க நேரிடும். 100 பேருக்கு இந்நோய் இருந்தால் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இறப்புகளை சந்திக்கின்றனர்.
 52% பேர் குறைந்த அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 15 சதவீதம் பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். 3 சதவீதம் பேர் மட்டுமே சிக்கலுக்கு ஆளாகின்றனர்.


மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்வதை தவிர்த்து தனிமையில் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களுக்கு இத்தகைய நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கை கழுவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பேட்டி: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்

0 comments: