Wednesday, March 04, 2020

On Wednesday, March 04, 2020 by Tamilnewstv in    
ஒன்றாக பயணித்து
ஒன்றாக மரணித்த நண்பர்கள்...



தமிழகத்தில் வேலூரைச் சேர்ந்த செந்தில் குமார் (36), திருச்சியை சேர்ந்த ராம் குமார் (30), முத்துப்பேட்டை சேர்ந்த சுபாஷ் குமார் (29). அபுதாபியில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் உற்ற நண்பர்கள்..
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வேலை விஷயமாக ஒமான் சென்ற நண்பர்கள் மூவரும் எல்லையில் சான்றிதழ் பிரச்சினையால் ஒமானுக்குள் நுழைய முடியாது திரும்பவும் அபுதாபி திரும்பி வரும் வழியில் அல் அய்ன் எனுமிடத்தில் இவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர்...

மருத்துவமனை நடவடிக்கை , தூதரக சான்றிதழ்கள் விரைந்து பெற்று #அஷ்ரப்_தாமரசேரி தவைமையிலான தன்னார்வ தொண்டர்கள் மூன்று பேரின் உடல்களையும் ஒரே விமானத்தில் சென்னை அனுப்பி வைத்தனர்..

எதிர்கால கனவுகளோடு குடும்பத்தை பிரிந்து அரபுலகில் வேலைக்கு சென்று விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள்

0 comments: