Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தொட்டியத்தில் 144 தடை உத்தரவினால் வாழை தோப்பில் அழுகி வீணாகும் வாழை பழங்கள் -
கருணை காட்ட வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவிரி கரையோர பகுதியாகும் .இங்கு விவசாயிகள் பெருமளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது வாழைமரங்கள் நன்கு குலை தள்ளிய நிலையில் வாழைத்தார்கள் வெட்டி எடுத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.
தொட்டியம் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே நன்கு பழுத்த நிலையில் காணப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 144 தடை உத்தரவினால் வாழைதார்கள் தோப்பில் இருந்து வெட்டி வெளியே எடுத்து வந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்றப்படும் சமூக இடைவெளி காரணமாக வாழை தார்களை வெட்டுவதற்கு கூலி ஆட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தோப்பிலே பழுத்த நிலையில் தொங்குகிறது .இதை பறவைகள் வந்து கொத்தி தின்று சேதப்படுத்துவதுடன் , வாழைப்பழங்களும் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளை காக்கும் நோக்கில் தமிழக அரசு வாழைப்பழங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கி விவசாயிகள் இழப்பை ஈடுகட்டும் வகையில் செயல்படவேண்டும். மேலும் வைட்டமின் சத்துள்ள வாழைப்பழங்களை சந்தைப்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நன்கு பழுத்து குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைப்பழங்கள் அழகுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் .அரசு நஷ்டயீடு வழங்குவதாக இருந்தால் கூட ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடாக அரசால் உதவிட இயலாது. எனவே வீணாகும் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
கருணை காட்ட வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவிரி கரையோர பகுதியாகும் .இங்கு விவசாயிகள் பெருமளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது வாழைமரங்கள் நன்கு குலை தள்ளிய நிலையில் வாழைத்தார்கள் வெட்டி எடுத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.
தொட்டியம் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே நன்கு பழுத்த நிலையில் காணப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 144 தடை உத்தரவினால் வாழைதார்கள் தோப்பில் இருந்து வெட்டி வெளியே எடுத்து வந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்றப்படும் சமூக இடைவெளி காரணமாக வாழை தார்களை வெட்டுவதற்கு கூலி ஆட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தோப்பிலே பழுத்த நிலையில் தொங்குகிறது .இதை பறவைகள் வந்து கொத்தி தின்று சேதப்படுத்துவதுடன் , வாழைப்பழங்களும் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளை காக்கும் நோக்கில் தமிழக அரசு வாழைப்பழங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கி விவசாயிகள் இழப்பை ஈடுகட்டும் வகையில் செயல்படவேண்டும். மேலும் வைட்டமின் சத்துள்ள வாழைப்பழங்களை சந்தைப்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நன்கு பழுத்து குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைப்பழங்கள் அழகுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் .அரசு நஷ்டயீடு வழங்குவதாக இருந்தால் கூட ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடாக அரசால் உதவிட இயலாது. எனவே வீணாகும் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
கர்நாடகாவில் கீழ்த்தரமான போராட்டங்கள் ! ஓசூர் கர்நாடக மாநில எல்லை அத்திப்பள்ளி அருகே தமிழக முதல்வர் உருவ படம் பாடை கட்டி வைத்து காவேரி ப்ரஜ...
0 comments:
Post a Comment