Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தொட்டியத்தில் 144 தடை உத்தரவினால் வாழை தோப்பில் அழுகி வீணாகும் வாழை பழங்கள் -
கருணை காட்ட வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவிரி கரையோர பகுதியாகும் .இங்கு விவசாயிகள் பெருமளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது வாழைமரங்கள் நன்கு குலை தள்ளிய நிலையில் வாழைத்தார்கள் வெட்டி எடுத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.
தொட்டியம் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே நன்கு பழுத்த நிலையில் காணப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 144 தடை உத்தரவினால் வாழைதார்கள் தோப்பில் இருந்து வெட்டி வெளியே எடுத்து வந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்றப்படும் சமூக இடைவெளி காரணமாக வாழை தார்களை வெட்டுவதற்கு கூலி ஆட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தோப்பிலே பழுத்த நிலையில் தொங்குகிறது .இதை பறவைகள் வந்து கொத்தி தின்று சேதப்படுத்துவதுடன் , வாழைப்பழங்களும் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளை காக்கும் நோக்கில் தமிழக அரசு வாழைப்பழங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கி விவசாயிகள் இழப்பை ஈடுகட்டும் வகையில் செயல்படவேண்டும். மேலும் வைட்டமின் சத்துள்ள வாழைப்பழங்களை சந்தைப்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நன்கு பழுத்து குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைப்பழங்கள் அழகுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் .அரசு நஷ்டயீடு வழங்குவதாக இருந்தால் கூட ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடாக அரசால் உதவிட இயலாது. எனவே வீணாகும் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
கருணை காட்ட வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவிரி கரையோர பகுதியாகும் .இங்கு விவசாயிகள் பெருமளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது வாழைமரங்கள் நன்கு குலை தள்ளிய நிலையில் வாழைத்தார்கள் வெட்டி எடுத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.
தொட்டியம் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே நன்கு பழுத்த நிலையில் காணப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 144 தடை உத்தரவினால் வாழைதார்கள் தோப்பில் இருந்து வெட்டி வெளியே எடுத்து வந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்றப்படும் சமூக இடைவெளி காரணமாக வாழை தார்களை வெட்டுவதற்கு கூலி ஆட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தோப்பிலே பழுத்த நிலையில் தொங்குகிறது .இதை பறவைகள் வந்து கொத்தி தின்று சேதப்படுத்துவதுடன் , வாழைப்பழங்களும் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளை காக்கும் நோக்கில் தமிழக அரசு வாழைப்பழங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கி விவசாயிகள் இழப்பை ஈடுகட்டும் வகையில் செயல்படவேண்டும். மேலும் வைட்டமின் சத்துள்ள வாழைப்பழங்களை சந்தைப்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நன்கு பழுத்து குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைப்பழங்கள் அழகுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் .அரசு நஷ்டயீடு வழங்குவதாக இருந்தால் கூட ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடாக அரசால் உதவிட இயலாது. எனவே வீணாகும் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment