Monday, April 06, 2020
On Monday, April 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி முசிறி
முசிறி அருகே தாங்களாகவே முன்வந்து கிராமத்தை வெளி தொடர்பிலிருந்து தனிமை படுத்திகொண்ட கிராமத்தினர் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களே தங்கள் கிராமத்தை வெளிதொடர்புகளிலிருந்து துண்டித்து தனிமைபடுத்தி கொண்ட சம்பவம் சமூகஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
முசிறி அருகே மங்கலம்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க வெளியாட்களை கிராமத்திற்குள் வராமல் இருக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராமத்திற்கு வரும் இரண்டு பிரதான வாயில்களை தடுப்புகள் அமைத்து அடைத்தனர். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு, 144 தடை உத்தரவு, அந்நியர்கள் கிராமத்திற்குள் நுழையதடை விதித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கலக்கி கிருமி நாசினி மருந்தாக கிராமங்களின் தெருக்களில் தெளித்தனர். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவையும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூகஇடைவெளியை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது கிராமத்தை தனிமை படுத்திகொண்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.
முசிறி அருகே தாங்களாகவே முன்வந்து கிராமத்தை வெளி தொடர்பிலிருந்து தனிமை படுத்திகொண்ட கிராமத்தினர் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களே தங்கள் கிராமத்தை வெளிதொடர்புகளிலிருந்து துண்டித்து தனிமைபடுத்தி கொண்ட சம்பவம் சமூகஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
முசிறி அருகே மங்கலம்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க வெளியாட்களை கிராமத்திற்குள் வராமல் இருக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராமத்திற்கு வரும் இரண்டு பிரதான வாயில்களை தடுப்புகள் அமைத்து அடைத்தனர். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு, 144 தடை உத்தரவு, அந்நியர்கள் கிராமத்திற்குள் நுழையதடை விதித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கலக்கி கிருமி நாசினி மருந்தாக கிராமங்களின் தெருக்களில் தெளித்தனர். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவையும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூகஇடைவெளியை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது கிராமத்தை தனிமை படுத்திகொண்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment