Monday, April 06, 2020

On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி முசிறி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கட்டணாம்பட்டி கிராமத்தில் சமூக விரோதிகளால்  பஞ்சாயத்து ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் தள்ளி விடப்பட்டு கற்களைக் கொண்டு மூடப்பட்டதால் பரபரப்பு.


   திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஆதனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கட்டணாம்பட்டி கிராமம் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தேவைக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சில சமூகவிரோதிகள் ஆழ்துளை கிணற்றுக்குள் மின் மோட்டார் மற்றும் வயர்களை உள்ளே தள்ளிவிட்டு கற்களைக் கொண்டு மூடிவிட்டு சென்றுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள்  குடிநீர் தேவைக்காக பல கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டிய நிலை உள்ளது.  எனவே இச்செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய கோரி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் இப்பகுதியில் பொதுமக்களும் பஞ்சாயத்து தலைவரும் புகார் அளித்துள்ளனர்.

0 comments: