Sunday, April 12, 2020
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு டாஸ்மாக் கடைகளிலிருந்த மதுபாட்டில்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் திருட்டு போனது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுக்கடைகளிலிருந்து மதுபாட்டில்கள் திருட்டுபோவதை தடுக்கும் விதமாக மதுகடைகளிலிருக்கும் மதுபாட்டில்கள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் முசிறி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த மதுக்கடைகளிலிருந்து எடுத்து வரப்பட்ட மதுபாட்டில்கள் கணக்கிடப்பட்டு பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல்வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் வாணிபகிடங்கிற்கு எடுத்துசெல்லப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு டாஸ்மாக் கடைகளிலிருந்த மதுபாட்டில்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் திருட்டு போனது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுக்கடைகளிலிருந்து மதுபாட்டில்கள் திருட்டுபோவதை தடுக்கும் விதமாக மதுகடைகளிலிருக்கும் மதுபாட்டில்கள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் முசிறி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த மதுக்கடைகளிலிருந்து எடுத்து வரப்பட்ட மதுபாட்டில்கள் கணக்கிடப்பட்டு பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல்வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் வாணிபகிடங்கிற்கு எடுத்துசெல்லப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment