Sunday, May 10, 2020
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகளாவிய பூட்டுதல் காரணமாக மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டனர்.
கொரோனா பாதிப்பினால் உலகளவில் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த பலர் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதனால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.இந்த வகையில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த சுமார் 400 பயணிகள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மலேசியாவில் தவித்துவந்த 177 தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அவர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, 177 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நேற்று (மே 9) இரவு 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
திருச்சி வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இந்தப் பரிசோதனை பணியை நேரில் பார்வையிட்டார்.
தவித்த 177 தமிழர்கள் திருச்சி வந்தடைந்தனர்அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே நகரத்திற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பயணிகளில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 40 நாள்களுக்கு மேலாக மலேசியாவில் தவித்துவந்த இவர்கள் தமிழ்நாடு திரும்பியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment