Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

  மகாராஷ்டிரா மாநிலம் பந்தபூரிலிருந்து 
962 தமிழக தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வருகை - தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்பு 30 பேருந்துகளில் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்

 நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில்
  

 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில்  வாழும் புலம் பெயர்ந்த தமிழ் நாட்டு தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வந்தனர்.
  
  ஊரடங்கு உத்தரவால் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதால் வெளிமாநில தொழிலாளர்களைப் அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதற்கு மத்திய அரசு சிறப்பு ரயில் நிலை ஏற்பட்டு செய்திருந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த 962 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்தனர் அங்கு அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் சோதனை செய்த பின்பே வெளியே செல்ல அனுமதித்தனர். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

  ரயில் நிலையத்தின் வெளியே 30அரசு பேருந்துகள் அந்தந்த மாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் மூலம் ஒரு பேருந்திற்கு 25 முதல் 30நபர் வரை  என  அழைத்துச்சென்றனர் அதேபோல பேருந்தில் செல்பவர்களுக்கு குடிநீர் உணவு வைக்கப்பட்டுள்ளன இந்த பேருந்துகள் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி. நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களுக்கு அழைத்த செல்லப் பட்டனர்.

 ரயில் நிலையத்தின் வெளியே போக்குவரத்து ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாக ஊழியர்கள் என பலரும் ரயிலில் இருந்து வரும் பயணிகளை கூட்டிச் செல்வதற்காகவும் அவர்களுக்குத் தேவையான முக கவசம், சானி டைசரை கொடுத்தனர். மேலும் ரயிலிலிருந்து  அனைவரும் சென்ற பின்பு ரயில் நிலையத்தில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
  
  திருச்சியை சேர்ந்த 29 பேர் நபர்கள் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைபடுத்திய பின்னர்  தங்களது வீடுகளுக்கு அனுப்பட உள்ளனர்.

 மேலும் மற்ற மாவட்டங்களினும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments: