Sunday, May 10, 2020
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தி அசத்தும் ஊராட்சி நடுநிலை பள்ளி.
ஆச்சரியத்துடன் பார்க்கும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்டிராய்டு செல்போன் மூலமாக ஆன் லைன் வகுப்புகளை பள்ளித் தலைமையாசிரியர் நடத்தி வருகிறார்.
எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள் முழுவதும் தொடர் விடுமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இப் பள்ளியில் கல்வி பயிலும் 6 வகுப்பில் 9 மாணவி, 7 மாணவர்களும், 7 ம் வகுப்பில் 2 மாணவர்களும், 6 மாணவிகளும் என 22 மாணவ மாணவிகளுக்கு பொது ஆங்கிலம், பொது கணிதம் ஆகிய பாடங்களை சென்னையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மீட் என்ற ஆப் மூலமாக மாணவ மாணவிகளின் அன்ராய்டு செல்போன் மூலமாக இனையதளம் வழியாக ஆன் லைன் வகுப்புகளை கடந்த ஏப்ரல் 27 ம் தேதி முதல் தினசரி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது.
இந்த பாடங்களை பள்ளி ஆசிரியை ஒருவர் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஆசிரியர்கள் இருவர் நடத்துகின்றனர். இந்த ஆசிரிய ஆசிரியைகள் நடத்தும் பாடங்களை பள்ளித் தலைமையாசிரியர் திருமாவளவன் தனது செல்போன் மூலமாக கண்காணித்து வருகிறார்.
இது குறித்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் திருமாவளவன் செய்தியாளரிடம் கூறியதாவது ..
இந்த வகுப்புகளை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதனை அவரது பெற்றோர்கள், கிராம மக்கள் ஆச்சரியப்படும் வகையில் இவ் வகுப்புகள் அமைந்துள்ளதெனவும், விடுமுறை காலங்களில் செல்போன்களில் எந்நேரமும் விளையாடு பொழுதைக் கழித்த குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக கல்வி கற்றலுக்காக பயன்படுத்துவதால் பெற்றோர்கள் மட்டுமல்லாது மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment