Sunday, May 10, 2020
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்..
திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் ஜி. கே தொழிற்பூங்கா வின் ஒரு பகுதியில் எவர்செண்டாய் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் இரும்பு தூண் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 1000 த்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் கம்பெனியிலேயே தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவை அரசு சற்று தளர்த்தியுள்ளதால், கம்பெனி மீண்டும் செயல்பட துவங்கியது.
ஆனால் பீகார், உத்திரபிரதேசம் , ஒரிசா,மகராஸ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத்தினைச் சேர்ந்த 122 பேருக்கு தற்போது போதிய உணவு வழங்க வில்லையெனவும், வேலை பார்த்ததற்கு உரிய சம்பளம் தரவில்லை எனவும், தற்போது தங்குவதற்கும் இடம் தர கம்பெனி நிர்வாகம் மறுத்து வருவதாக புகார் கூறினார்.
இது தொடர்பாக கம்பெனி நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின. போரில் கம்பெனி அலுவர்களுடன் போலீஸார் பேசியதில் விரைவில் சம்பளம் வழங்குவதாகவும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி் வருவதாகவும் , வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் கம்பெனி வளாகத்திற்கு திரும்பிச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment