Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200


 மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் ஒருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள விற்பனை மேலாளரை தேடி வருகின்றனர்.


  முசிறி அருகே அமைந்துள்ள 
கோதூர்பட்டியில் கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது இன்று 144 தடை உத்தரவு பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மார்க் கடையில் வியாபாரம் களைகட்டியிருந்தது 

 இந்நிலையில் நீதிமன்றம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய கோதூர் பட்டி டாஸ்மார்க் கடை விற்பனை மேலாளர் பாண்டியன்  அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு 1200 குவாட்டர் மதுபாட்டில்கள்  அடங்கிய 25அட்டை பெட்டிகளை ஆம்னி வேனில் ஏற்றி விற்பனை  செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளார். 

  அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் 1200 மது பாட்டில்களையும், ஆம்னி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.    

 மேலும் ஜெகநாதன் என்பவரை   போலீசார் கைது  செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு  1 லட்சத்து 80  ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கோதுர்பட்டி டாஸ்மார்க் கடையின் விற்பனை மேலாளர் பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: