Tuesday, May 12, 2020

On Tuesday, May 12, 2020 by Tamilnewstv in    
சமயபுரத்தில் அதிமுக சார்பாக 500 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது..!

கொரோனாவின் நோய் தொற்று பரவல் காரணமாக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது, 


 
இதனால் மக்களுக்கு அன்றாட பொருட்களை பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் நிவாரணங்களை வழங்கி வருகின்றன, தமிழகத்தில் அதிமுக சார்பாக பல்வேறு இடங்களில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது தற்பொழுது சமயபுரம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சார்பாக சமயபுரம் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, 


 வார்டு வாரியாக சுமார் 500 பேருக்கு இன்று வழங்கப்பட்டது, இதில் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவை அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கு முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் கொடுக்கப்பட்டது ,மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

 இந்நிகழ்வில் சமயபுரம் பேரூராட்சி  தலைவர் சின்னையன், நகர செயலாளர் சம்பத்குமார், நகரத் துணைச் செயலாளர் மனோகரன், ராஜேந்திரன், மணிகண்டன், மணிராஜ், குப்புசாமி, கண்ணன், வேல்முருகன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: