Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
DYFI சார்பில் அரசாணை51ஐரத்துசெய்ய வயிற்றில் ஈரத் துணிகட்டி போராட்டம்
திருச்சி மாநகரில் (DYFI)  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்ப பெற கோரியும்

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற அதிமுக நிர்வாகிகள் மீது கடுமையான தண்டனை வழங்கிட கோரியும் மாநிலம் முழுவதும் வயிற்றில் ஈர துணி கட்டி முழக்கமிடும் போராட்டம் நடைபெற்றது.
அதனொரு பகுதியாக திருவெறும்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் பா.லெனின் DYFl மாநகர் மாவட்ட செயலாளர் தலைமையிலும்
பாலக்கரை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் S.சுரேஷ் மாநகர் மாவட்ட தலைவர் தலைமையிலும் கீழ்புதூரில் நடைபெற்ற போராட்டத்தில் பகுதி செயலாளர் இரட்டமலை தலைமையிலும் நடைபெற்றது.

0 comments: