Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
காசநோய், தொழுநோய் உள்ளிட்ட பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள்.
மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா ஊரடங்காக இந்த கால கட்டத்தில் காசநோய், தொழுநோய், ஆட்கொல்லி நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களும் வழங்கப்பட்டது. மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினர்.
இதே போல் மணப்பாறை பகுதியில் கொரோனா முடக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள தப்பாட்ட கலைஞர்களுக்கு தாசில்தார் தமிழ்கனி அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கினார்.

0 comments: