Monday, June 01, 2020
On Monday, June 01, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 36 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன.
இதையடுத்து இன்று முதல் பேருந்துகள் இயக்க படலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தமிழக அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 28 புறநகர் பேருந்துகளும் 8 நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கையுறை மற்றும் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சனிடைசர் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பேருந்தும் பேருந்து நிலையம் வரும் பொழுது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு இயக்கப்பட்டன. இன்று முதல் நாள் என்பதால் பயணிகள் குறைவாகவே காணப்பட்டனர். நாளடைவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும் துறையூர் பகுதிகளில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment