Saturday, May 29, 2021
திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் உள்ளது. கழிவுநீர், குப்பை, ஆகாயத்தாமரை ஆகியவற்றால் இந்த வாய்க்காலில் நீரோட்டம் பாதித்துள்ளது.
இதனால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. மேலும் எதிர்வரும் மழை காலத்தில் இந்த பகுதியிலிருந்து மழை நீர் வடிவதற்கு மிகவும் இடையூறாக இருக்கும். மழை காலம் வருவதற்குள் திருச்சி மாநகரில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகராட்சி மூலம் இந்த வாய்க்காலை தூர்வார வலியுறுத்தினார்.
தற்போது கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்டார். வாய்க்கால் முழுவதையும் ஆழமாக தூர்வார மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்..
சமூக வலைத்தளத்தில் இனிகோ இருதயராஜ் நிர்வாகிகளை அழைப்பது இல்லை எனவும் நிர்வாகிகள் உடன் சேர்ந்து ஆய்வுக்கு செல்வதில்லை எனவும் இதனால் திமுக நிர்வாகிகள் இனிகோ இருதயராஜ் மீது அதிருப்தியில் உள்ளதாக பொய்யான செய்தி பரப்பியுள்ளனர்.
திருச்சியில் இனிகோ இருதயராஜ் திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அப்பாற்பட்டு செயல்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிற செய்தி முற்றிலும் பொய்யானது.
'அனைவரும் பாருங்கள்' அனைத்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள். ஆய்வுக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் நிர்வாகிகள் என்னுடன் பயணிக்கிறார்கள் எனக் எனக் கூறினார்.
இந்த ஆய்வின் போது திமுக பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டி சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment