Thursday, June 03, 2021
திருச்சி மேலசிந்தாமணியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி சமூக இடைவெளியை கடைபிடித்து தலைமைக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி கொண்டாடப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் 98வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திமுக திருச்சி தெற்கு மாவட்டம் 9வது வட்டம் மேலசிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக முன்னாள் வட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.
அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறி மற்றும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஸ்ரீதர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஜார் மைதீன், மாவட்ட செயலாளர் விக்டர், டோரி பாலு, ஆட்டோ பாலு, கோபி, விகேஎன் சுரேஷ், செந்தில், சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி அல்லாபிச்சை மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment