Showing posts with label kotagiri. Show all posts
Showing posts with label kotagiri. Show all posts
Sunday, May 03, 2015
கோத்தகிரி: கோடை சீசனையொட்டி, ஆண்டு தோறும் தோட்டக்கலைதுறை சார்பில் ஊட்டியில் மலர்கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு துவக்க நிகழ்ச்சியாக 8வது காய்கறி கண்காட்சி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் நேற்று காலை துவங்கியது. கண்காட்சியில் கோவை, மதுரை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்ட தோட்டக்கலை துறையின் சார்பிலும், தனியார் சார்பிலும் மொத்தம் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட தோட்டக்கலை சார்பில் பூசணி, முள்ளங்கி, கேரட் ஆகியவற்றைக்கொண்டு திருமலைநாயக்கர் மஹால், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் 40 கிலோ சேனை கிழங்கால் டிராகன், நெல்லை மாவட்டம் சார்பில் 50 கிலோ வெள்ளை பூசணியால் மயில் உருவம் அமைத்து உள்ளனர்.
இதே போல பாகற்காயால் முதலை, 10 கிலோ பச்சை மிளகாயால் சேவல் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் சார்பில் 75 கிலோ முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் வாழை மரங்களால் பாரதமாதா உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 450 கிலோ பலவண்ண குடைமிளகாய்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் கண்காட்சியில் தனிஇடம் பிடித்துள்ளது. கண்காட்சியை காண காலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு வகையான காய்கறி அலங்காரங்களை பார்த்து வியந்தனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
