Sunday, May 03, 2015
கோத்தகிரி: கோடை சீசனையொட்டி, ஆண்டு தோறும் தோட்டக்கலைதுறை சார்பில் ஊட்டியில் மலர்கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு துவக்க நிகழ்ச்சியாக 8வது காய்கறி கண்காட்சி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நேரு பூங்காவில் நேற்று காலை துவங்கியது. கண்காட்சியில் கோவை, மதுரை, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்ட தோட்டக்கலை துறையின் சார்பிலும், தனியார் சார்பிலும் மொத்தம் 21 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட தோட்டக்கலை சார்பில் பூசணி, முள்ளங்கி, கேரட் ஆகியவற்றைக்கொண்டு திருமலைநாயக்கர் மஹால், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் 40 கிலோ சேனை கிழங்கால் டிராகன், நெல்லை மாவட்டம் சார்பில் 50 கிலோ வெள்ளை பூசணியால் மயில் உருவம் அமைத்து உள்ளனர்.
இதே போல பாகற்காயால் முதலை, 10 கிலோ பச்சை மிளகாயால் சேவல் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் சார்பில் 75 கிலோ முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் வாழை மரங்களால் பாரதமாதா உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் 450 கிலோ பலவண்ண குடைமிளகாய்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் கண்காட்சியில் தனிஇடம் பிடித்துள்ளது. கண்காட்சியை காண காலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு வகையான காய்கறி அலங்காரங்களை பார்த்து வியந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment