Sunday, May 03, 2015
திருப்பூர், : திருப்பூர் அடுத்துள்ள 63 வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (29). கட்டிடத் தொழிலாளி, இவரது மனைவி பூங்கொடி. அதே பகுதியில் உள்ள தறி குடோனில் வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இவர்களது குழந்தை சிவராமகிருஷ்ணன் (2) தினேஷ்குமாரின் தாயார் கலைவாணியின் பராமரிப்பில் இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீட்டருகே கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்றுள்ளான்.அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளான். குழந்தையை காணாது பதறிய பாட்டி கலைவாணி மற்றும் அக்கம், பக்கம் தேடியுள்ளார். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது, குழந்தை தண்ணீரில் மூழ்கியபடி கிடந்தான். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, பூமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
.jpg)
0 comments:
Post a Comment