Thursday, September 25, 2014
செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.
விண்கலத்தில் உள்ள முக்கிய என்ஜினை நேற்று இயக்கி சோதனை செய்து பார்க்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது. மேலும் ஒரு சிறிய திருத்தம் செய்யப்பட்டு அந்த விண்கலம் சரியான திசையில் திருப்பி விடப்பட்டது.
அந்த விண்கலம் தற்போது வினாடிக்கு 22.1 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. அதிகாலை அந்த பயண வேகம் வினாடிக்கு 4.4 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டு செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
மங்கள்யான் விண்கலம் 300 நாட்களுக்கு மேல் பயணம் செய்து இலக்கை எட்டி உள்ளது. முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மங்கள்யான் விண்கல திட்டம் வெற்றி பெற்றதற்கு அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜெட் பிரோபல்சன் ஆய்வுக்கூடம் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை வலுவுள்ள வகையில் முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய சபையொன்றை உருவாக்குவதென்று, அதன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்குழுத் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றுவதற்குரிய யாப்பு ஒன்றைத் தயாரிப்பது, பலதரப்பட்ட மக்கள் அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய சபையை உருவாக்குவது, வடமாகாண சபையின் செயற்பாடுகளை கட்டுக்கோப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய தீர்மானங்கள் இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகள் தத்தமக்கென பிராந்தியங்களில் செல்வாக்கு பெற்றிருக்கின்றபோதிலும், அவற்றின் செயற்பாடுகள் உளப்பூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, அத்தகைய ஒரு குறைபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், அரசியல் செயற்பாடுகளில் மக்களை ஒன்றிணைப்பதற்காக அமைக்கப்படவுள்ள தேசிய சபை உருவாக்கப்படும்போது, இந்தக் குறைபாட்டை நீக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
கூட்டமைப்பின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, சரியான அரசியல் தீர்வொன்றின் தீர்வு காண்பதென்றும், அதற்கான முன்னெடுப்புக்கு சகலரையும் உள்ளடக்கிய தேசிய சபை பேருதவியாக இருக்கும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஓன்றிணைந்த அரசியல் கட்சிகளின் அமைப்புக்கு அப்பால் பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கிய இத்தகைய கட்டமைப்புக்கள் பல நாடுகளில் செயற்பட்டிருக்கின்றன, செயற்பட்டு வருகின்றன என்றும் அதனைப் பின்பற்றியே தாங்களும் ஈபிஆர்எல்எவ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சிகளின் மாநாடுகளில் மேற்கொண்ட தீர்மானங்களின் அடிப்படையில் தேசிய சபையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருப்பூர் மாநகராட்சி 22- வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.,க. வேட்பாளர் கலைமகள் .கோபால்சாமி க்கு திருப்பூர் மாநகராட்சியில்நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் வனத்துறை ,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், எஸ்.ஆர்.ஜெயக்குமார், கருவம்பாளையம் மணி, கருணாகரன், நிலைக்குழு தலைவர்கள் அன்பகம் திருப்பதி, பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ராஜேஷ் கண்ணா, கண்ணபிரான், சடையப்பன், ராஜ்குமார்,அன்பரசன், ஹரிஹரசு தன், வேலுமணி, நீதிராஜன, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், ருக்குமணி, கோமதி, சுந்தரி,, ரைகானா , ஈஸ்வரமூர்த்தி, ரத்தினகுமார், பி.லோகநாதன்,சுந்தராம்பாள், பரமராஜன், உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
திருப்பூர், செப். 25-
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் இரயில்டெல் நிறுவனம் மூலம் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள் வழங்குவது குறித்து கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்கள் உடனான விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்புரையாற்றினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர் களின் சிறப்பு திட்டமான தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனமானது அனைத்து மக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையை பெறும் திட்டமான அகண்ட அலைவரிசை திட்டத்தை (பிராட்பேன்ட்) துவக்குகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண்.110-ன் கீழ் அறிவித்த அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் பிற இணையதள சேவைகள், ஆகியவற்றை இரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி இந்தச் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்குபெற வந்துள்ள ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பயன்பெற்று மக்களுக்கு இச்சேவையினை சென்றடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் களின் சேவை அனைவருக்கும் தேவை என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் இணையதள சேவைகளை தங்கள் வாயிலாக அனைத்து குக்கிராம மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக கேபிள் டி.வி. மூலமாக செயல்படுத்தி உள்ளார்கள். இதன் மூலமாக கேபிள் டி.வி. ஆபரேட்டா;கள் தங்கள் வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும். எனவே இச்சேவைகளை திறம்பட செய்ய வேண்டும். மேலும் இத்தகைய கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு இன்னும் பல சலுகைகளை வழங்க உள்ளார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா அவா;கள் அறிவிக்க உள்ளாலீ;கள். இவ்வாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவா; உடுமலை .கே.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அம்மா கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை, நிறுவி திறம்படி செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் பொதுமக்களும் குறைந்த செலவில் கேபிள் சேவையினை பெற முடிகிறது. 3 ஆண்டுகள் கேபிள் டி.வி. நிறுவனம் ரூ.12 கோடி இலாபத்தினை அடைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 27000 கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் உள்ளனர்
முன்னதாக, இரயில்டெல் நிறுவனம் மூலமாக தயாரி க்கப்பட்ட இணையதள தொழில்நுட்பம் குறித்து விளக்க குறுந்தகடுகள் (சி.டி.) வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் , தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவன தலைமை தொழில்நுட்ப அலுவலர் .பி.முரளி, முதுநிலை மேலாளர் ; (தொழில் நுட்பம்) .பழனிவேலன், மேலாளர் (வர் த்தகம்) இரயில்டெல் கிருபானந்தன், கிளை மேலாளர் தனிவட்டாட்சியர் எம்.விஜயகுமார், மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கேபிள் பாலு மற்றும் திருப்பூர் ஈரோடு மாவட்டங்களைச் சார்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டாகள் உட்பட பலா கலந்து கொண்டனா;.
திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் , அங்கேரிபாளையத்தில் நடந்தது.
பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கே..விஜயகுமார், தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ் .எம்.ஆனந்தன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், தலைமை கழக பேச்சாளர் பாண்டியன், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வேலம்பாளையம் நகர செயலாளர் வி.கே.பி.மணி, ஒன்றிய தலைவர் சாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, ச்டீபனராஜ், பூளுவபட்டி பாலு, பட்டுலிங்கம், எஸ்.எம்.பழனிசாமி, மார்க்கேட்சக்திவேல், எஸ்.ஆர். ஜெயக்குமார்,தம்பி மனோகரன், பாசறை செயலாளர் தங்கராஜ், சடையப்பன்,கருனாகறன, கவுன்சிலர்கள் சத்யா, கல்பனா, சுப்பிரமணி, பாலசுப்பிரமணியம்,நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குற்ற வழக்குகளில் சிக்கும் கைதிகள், போலீஸ் மற்றும் நீதிபதி முன் மிகவும் பவ்யமாக நடந்து கொள்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த பெண் கைதி ஒருவர், போலீசாரின் கார் இருக்கையை கடித்து சேதப்படுத்தி மற்றொரு வழக்குக்கு ஆளாகி உள்ளார். அமெரிக்காவின் ஜடகோ மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டாசி ஸ்பென்ஸ். இவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு தம்பதி மீது மிளகுபொடியை வீசினார். எனவே அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், ஸ்டாசி ஸ்பென்சை போலீசார் கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சென்ற அவர், திடீரென ஒரு போலீஸ் காரின் பின் இருக்கையை தனது பற்களால் நறுநறுவென கடித்து துப்பினார். இதனால் அந்த இருக்கை முழுவதும் சேதமடைந்தது. இது தொடர்பாக அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிகிறது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியில் எந்த அளவுக்கு ஒரு டாக்டரின் பணி
முக்கியமோ, அதே அளவுக்கு நர்சுகளின் பணியும் அவசியம். நர்சுகள் கூறும் ரத்த
அழுத்தம், உடல் வெப்பநிலை போன்ற உடல் பரிசோதனை முடிவுகளின்படி தான்
நோயாளிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளிப்பார். அவ்வாறு நர்சுகள் கொடுக்கும்
பரிசோதனை முடிவுகள், அவர்களது மோசமான கையெழுத்துக்களால் நோயாளியின் உயிரையே
பறித்து விடுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தில் உள்ள 2 மருத்துவமனைகளை ஆய்வு செய்தனர். கடந்த 2004 முதல் 2010 வரை நடத்திய ஆய்வில், நர்சுகளின் மோசமான கையெழுத்து காரணமாக 2 மருத்துவமனைகளிலும் 750 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனைகளில் உள்ள நர்சுகளுக்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ போன்களும், ஐ பேடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 15 சதவீதம் இறப்பு விகிதம் குறைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில் தொழுவு ஊராட்சியில் அ.இ .அ .தி .மு க வேட்பாளர் திரு .c மாசிலாமணி வெற்றி பெற்றார் .வேட்பாளரை வாழ்த்தி பொள்ளாச்சி .வ .ஜெயராமன் சட்ட மன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி பாராளுமன்ற c மகேந்திரன் எம் .பி . சண்முகவேலு எம் .எல் .ஏ .அரசு கேபிள் டிவி வாரியத்தலைவர் உடுமலை ராதகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் திரு தமயந்தி மாசிலாமணி உடன் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுந்தரசாமி மற்றும் அ.இ .அ .தி .மு க.நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

