Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரம் இல்லாமல், சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வளர்மதி. இவர் தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பதவி வகிக்கிறார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இதற்கு முன்பே அமைச்சர் வளர்மதி மகனின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தடை உத்தரவு முடிந்ததும் இந்த திருமணம் கடந்த 4, 5 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, சிறப்பாக நடைபெறவிருந்த, நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக அமைச்சர் வளர்மதி மகன் திருமணம் ஆடம்பரமின்றி சமூக இடைவெளியுடன் திருச்சி குணசீலம் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.இந்த திருமண நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்ப உறவுகள் மட்டும் வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் வளர்மதி - சீதாராமன் ஆகியோரது இளையமகன் ஹரிராம் - திருச்சி மருதாண்டா குறிச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் - சந்திரா ஆகியோரது மகள் சூரியபிரபா ஆகியோரது திருமணம் பூட்டப்பட்டிருந்த கோயில் வாசல் முன்பு, இனிதே நடந்து முடிந்தது.இந்த நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாவட்ட அதிமுக மகளிரணி செயலாளர் தமிழரசி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் மட்டும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
தமிழக அரசு நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அதன் படி
நமது திருச்சி மாவட்டத்தில் நகர்புறங்களில் உள்ள 71 மதுபான கடைகளும் கிராமப்புறங்களில் உள்ள 112
மதுபான கடைகளும் இதில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் 20
கடைகள் திறக்கப்படவில்லை.
மதுபான கடைகள் தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
திறக்கப்பட்டிருக்கும். மது வாங்க வருபவர்களுக்கு காலை 8.00 மணி முதல் சமுக இடைவெளியை
பின்பற்றி டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வரிசைபடி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். மதுபான
கடையில் வரிசையில் நின்று வாங்குவதற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது 6 அடி இடைவெளி
விட்டு வரிசையில் நிற்பதற்காக அடையாளம் இடப்பட்டுள்ளது.
மதுபானக் கடை ஊழியர்களுக்கு கிருமிநாசினி கையுறை முககவசம் ஆகியவை
வழங்கப்பட்டுள்ளது. மதுபானம் வாங்க வருபவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் கிருமிநாசினி
கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மதுபானங்களை வாங்க அனுமதிக்கப்படுவர்.
சமுக
இடைவெளியை பின்பற்றி நாளை முதல் மதுபானக் கடைகள் செயல்படும். மொத்தமாக எந்தவொரு
நபருக்கும் மதுபான வகைகள் வழங்கப்படாது. தனிநபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
மணப்பாறையில்
தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக 500 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக 144 ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதித்து மிகவும் சிரமம் படுவதால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி,பருப்பு என்னை, மிளகாய்த்தூள், மஞ்சத்தூள,மல்லித்தூள் குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் காய்கறிகள் ஆகியவை சுமார் ரூபாய் 1000 மதிப்புள்ள உணவுப்பொருட்களை வழங்கப்பட்டுள்ளது.
இதில் திருச்சி மாநகரம்,
லால்குடி ஒன்றியம்,
புள்ளம்பாடி ஒன்றியம்,
துறையூர் ஒன்றியம், உப்பிலியாபுரம் ஒன்றியம், தாப்பேட்டை ஒன்றியம், முசிறி ஒன்றியம், மணிகண்டம் ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், மருங்காபுரி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 500 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவாக மணப்பாறை உள்ள திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் விஜயகுமார் அவர்கள் தலைமையிலும் மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் தங்கவேல் அவர்கள் மாவட்ட ஆலோசனைக் குழு தலைவர் சுப்புரத்தினம் மாவட்ட ஆலோசனைக் குழு மகளிரணி செயலாளர் தனலட்சுமி முன்னிலையில் 50 மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மதிமுக 27 ஆம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது
திருச்சியில் இன்று மதிமுகவின் 27 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியான கொடியேற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது மதிமுகவின் கொடிகள் உறையூர் மேட்டு தெரு குமரன் நகர் ஆகிய இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ராஜன் இலமுருகு மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் தலைமை வகித்தார். ஜெயசீலன் பகுதி கழக செயலாளர் வரவேற்புரையாற்றினார் சக்தி மகேந்திரன் மோகன் முரளி சுந்தர் ஜாஹிர் இஸ்மாயில் ஆனந்தன் எட்வர்டு தவமணி புண்ணியமூர்த்தி அசோக்குமார் ராமசுப்பு, மாரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கொடியேற்றி அன்னதானம் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டிசோமு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ரொஹையா பெல் ராஜமாணிக்கம் துரையரசன் எல்லகுடி அன்புராஜ் அடைக்கலம் (தலைவரின் நேர்முக உதவியாளர்) ஜார்ஜ் ராஜா மலர் செழியன் விவேக் அன்பு சேகர் பாரதி அர்ஜுன் ரெங்கராஜ் நாகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு அனைத்தும் உறையூர் பகுதி கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஸ்போர்ட் வரதன் 60 வது வட்ட கழக செயலாளர் நன்றி உரை ஆற்றினார்.
பின்னர் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா கூறுகையில்
நாங்கள் 27 ஆண்டுகளாக டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தோம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் மதிமுக சார்பில் 3000 கிலோ மீட்டர் வரை நடந்து கிராமங்களுக்கு எல்லாம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
நாங்கள் வழக்கு தொடர்ந்ததால் அதன் விளைவுதான் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மூடப்பட்டுள்ளது தற்போது சில நாட்களாக எல்லோரும் நன்றாக தான் இருந்தார்கள் நாளைக்கு டாஸ்மார்க் கடைகளை திறந்தால் பெரும் விளைவை சந்திக்க நேரிடும் ஊரடங்கு உத்தரவை மூடப்பட்ட மதுக் கடைகளை தொடர்ச்சியாக மூடி மதுவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய தலைவரின் குறிக்கோள்
மதுபான கடைகளை திறந்தால் கொரோனாதொற்று அதிகமாக பரவ கூடும் என்பதுதான் உண்மை மது அருந்துவதனால் அவர்களின் மது அருந்துபவர்களின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். எளிதாக கொரோனா தொற்று பரவ கூடும் இதனால் மருத்துவர்களுக்கு காவல்துறையினருக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்
இப்போது இருக்கும் வேலையை விட பத்து மடங்கு அதிகமாகும்
எங்கள் மதிமுகவின் சார்பாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்பது தாழ்மையான வேண்டுகோள்
தற்போது உள்ள மதுபானங்கள் விரைவில் காலாவதி ஆகப்போகிறது அதனால்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கிறார்கள்,
இது பெரும் பிரச்சினையை தமிழகத்திற்கு ஏற்படுத்தும் சமூக பரவல்கள் அதிகமாக கூடும் என்று மருத்துவர் ரொஹையா தெரிவித்தார்.
பேட்டி.... மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் ரொஹையா
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி
மாவட்ட குற்றவியல் சங்கம் சார்பில் நலிந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து நீதிமன்றங்கள் மூடப்பட்ட தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் வழக்கறிஞர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் திருச்சி மாவட்ட குற்றவியல் சங்கத்தின் சார்பில் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர் அரிசி, காய்கறி ஆகியவற்றை வழங்கினார். மேலும் கொரோனா தொந்த நோய் கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிருபாகரன்மதுரம், மற்றும் வழக்கறிஞர்கள் வெங்கடேஷ், கிஷேர் குமார், கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு இன்று முதல் கட்டமாக 50 வழக்கறிஞர்களுக்கு கொடுக்கப்பட்டது தொடர்ந்து 200 பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி நிலையங்கள்
மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மீதான தடை அரசின் மறு உத்தரவு
வரும்வரை அமலில் இருக்கும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான
சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும் கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு
பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்படுகிறது.
*அரசாணை மீறி
செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை*
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசால்
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் பயிற்சி
நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகள் மீதான தடைகள் அரசின்
மறுஉத்தரவு வரும்வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்உள்ள அனைத்து வகைபள்ளிகளிலும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை பணிகள் (இணையவழி உட்பட) மற்றும்
கட்டணம் வசூல் செய்தல் போன்ற எந்த ஒரு பணியும் மேற்கொள்ளுதல் கூடாது என திட்டவட்டமாக
அறிவிக்கப்படுகிறது.
இவ்வானையினை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான துறைவாரி நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய்
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்
நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய்
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர்.
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள்
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராபபள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக
தடைசெய்யபபட்டு தனிமை படுத்தப்பட்ட பகுதிகளான துவரங்குறிச்சி தொட்டியம் அலகரை ஆகிய
இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று நேரில்
சென்று பாவையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருசசிராப்பள்ளி மாவடடத்திற்கு வருகை
புரிந்த 28 நபர்களையும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படடுள்ளது.
தனிமைப்படுத்தபபட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துவரங்குறிச்சி மற்றும் தொட்டியம் வட்டம் அலகரை
ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு தனிமைப்படுத்தபபட்டவர்கள் 14 நாடகள் தனிமையில்
இருக க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்சசியில் முசிறி கோடடாட்சியர் (பொ)பழனிதேவிமருங்காபுரி வட்டாட்சியர்
சாந்தி தொட்டியம் வட்டாட்சியர் மலர் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
செந்தில்,ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி வலைவீசி முயல் பிடிக்க முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு
திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில் வனவா் சரவணன் மற்றும்
வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில், வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும்
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர் வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக கைது செய்து
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1) & IPC 188, 269, 270, 271
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...









