Monday, July 28, 2014
திருப்பூர், ஜூலை. 28-
திருப்பூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சியான 100 நாட்கள் நடக்கும் மக்கள் முகாமின் முதல் முகாம் கூட்டம் திருப்பூர் நல்லூர் அருகில் உள்ள கே.என்.பி.சுப்பிரமணிய நகரில் நடந்தது.மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,திருப்பூர் துணை மேயர் குணசேகரன், எம்.எல்.ஏ., கருப்பசாமி சிறப்புரையாற்றினர்.
தமிழக முதல்வர் அம்மா அவர்களை மூன்றாண்டுக்கு முன் அரியணையில் அமர்த்தினீர்கள்.இன்றைக்கு அம்மா அவர்கள் சொல்லிய வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார்கள்.39 தொகுதிகளிலும் அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன. தன்னந்தனியாக தமிழக மக்களை நம்பி, தனியாக வேட்பாளர்களை நிறுத்தி, மக்களிடம் திட்டங்களை விளக்கி அம்மா அவர்கள் ஒட்டு கேட்டார். 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றி அளித்துள்ளீர்கள்.
கடந்த ஆட்சியில் மக்களுக்காக எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அனால் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அளித்தவர் அம்மா; தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக முதல் குரல் கொடுப்பவர் அம்மா. காவிரி பிரச்சினையில் தமிழக உரிமையை நிலை நாட்டியவர் அம்மா அவர்கள். பாலாறு பிரச்சினையிலும் அம்மா அவர்கள் தான் குரல் கொடுத்து உள்ளார்; அதலும் வெற்றி பெறுவார்.
தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். 1.80 கோடி ரேசன் கார்டுகளுக்கு விலையில்லா அரிசி; முதியோருக்கு 1000 ரூபாய், பெண்களுக்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்க கூடியவர் அம்மா மட்டுமே.
கடந்த காலத்திலேயே தி.மு.க தலைவர் கொடுத்த டி.வியால் எந்த பிரயோஜனமுமில்லை.
ஆனால் அம்மா அவர்கள் வழங்கும் திட்டங்கள் மக்களுக்கு பயனளிப்பவை.
இன்றைக்கு ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம்; நிதியுதவி வழங்கும் முதல்வர் அம்மா அவர்கள்.
சூரிய மின் சக்தியோடு பசுமை வீடுகளை வழங்குபவர் அம்மா ; கிராம பகுதி பெண்கள் பயன்பெற விலையில்லா ஆடுகள் வழங்குகிறார் . 4 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டம் என அம்மா அள்ளித்தந்த திட்டங்களுக்கு தந்த அங்கீகாரம் தான் 37 தொகுதிகளில் நீங்கள் தந்த வெற்றி.
வெற்றியை பெற்றதற்கு பின்னால் பாரத பிரதமரை நேரில் சந்தித்து தமிழக திட்டங்களை செயல்படுத்த கேட்டுள்ளார்; அதை நிறைவேற்றியும் தருவார்.
இதே கருணாநிதி ஜெயித்திருந்தால் குடும்பத்துக்கு மந்திரி பதவி தான் கேட்பார். ஆனால் அம்மா அவர்கள் தமிழக மக்களுக்கான திட்டங்களை கேட்டு இருக்கிறார்.
மூன்றாண்டு காலமாக திட்டங்களை வழங்கி சாதனை படைத்த அம்மா அவர்கள் இன்னும் பல திட்டங்களை வழங்குவார்;என்றைக்கும் அம்மா அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கடந்த தி.மு.க ஆட்சியில் திருப்பூர் பனியன் தொழில் முடக்கப்பட்டது. அம்மா அவர்கள் தொழிலுக்கு தீர்வு ஏற்படுத்தினார்;வட்டியில்ல கடனாக 200 கோடி ரூபாய் வாரி கொடுத்தார். கடந்த காலத்திலேயே பெயரளவுக்கு இருந்த மாவட்டம், மாநகராட்சியை இன்று முழுமையான செயல்பாட்டில் கொண்டு வந்து நிதி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து இருப்பவர் அம்மா.
தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்தவர் அம்மா. காவிரி பிரச்சினைக்காக வழக்கு தொடுத்து வெற்றி கண்டவர் அம்மா.இவ்வாறு அமைச்சர் ஆனந்தன் பேசினார்.
இந்த கூட்ட்டத்தில் மண்டல தலைவர்கள் ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, பி.கே.எம்.முத்து, கருணாகரன், அட்லஸ் லோகநாதன், பி.கே.எம்.முத்து, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், கலைமகள் கோபால்சாமி, ரத்தினகுமார், பி.லோகநாதன், ஷாஜகான், சுபா மோகன், அய்யாசாமி, வி.கே.பி.மணி, புலவர் சக்திவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment