Thursday, July 17, 2014
On Thursday, July 17, 2014 by Anonymous in Break   

டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவந்த இழப்பு கணிசமாக குறைந்துள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு நேர்ந்து வருகிறது என்கிற காரணத்தால், டீசல் விலையை மாதம் தோறும் லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் படி கடந்த இரண்டு வருடங்களாக டீசல் விலையை மாதம் தோறும் லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இழப்பை ஈடு செய்து வந்தன.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த இழப்பு என்பது கடந்த மார்ச் மாதத்தில் 8 ரூபாய் 37 காசாக இருந்தது என்றும், இப்போது 2 ரூபாய் 49 காசாக குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளதால், மாதம் தோறும் டீசல் விலையை லிட்டருக்கு 50 பைசா வரை உயர்த்தியதும் இந்த இழப்புக் குறைந்ததற்கு காரணம் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment