Saturday, August 30, 2014
உடுமலை, : உடுமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வனத்துறை செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட துவங்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.
உடுமலை அருகே 9/6 செக்போஸ்ட் உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்த செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள், இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் பதிவு செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில், பதிவுக்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அருகில் உள்ள அமராவதி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
அதை தவிர்க்க அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலையான் கோயில் சுற்று பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய செக்போஸ்ட் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த செக்போஸ்ட் கட்டும் பணி முடிந்து மாதக்கணக்கில் செயல்படாமல் கிடந்தது. மேலும் செக்போஸ்ட் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் உடுமலை வனச்சரக பகுதியில் வன குற்றங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment