Saturday, August 30, 2014
உடுமலை, : உடுமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வனத்துறை செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட துவங்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.
உடுமலை அருகே 9/6 செக்போஸ்ட் உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்த செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள், இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் பதிவு செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில், பதிவுக்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அருகில் உள்ள அமராவதி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
அதை தவிர்க்க அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலையான் கோயில் சுற்று பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய செக்போஸ்ட் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த செக்போஸ்ட் கட்டும் பணி முடிந்து மாதக்கணக்கில் செயல்படாமல் கிடந்தது. மேலும் செக்போஸ்ட் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் உடுமலை வனச்சரக பகுதியில் வன குற்றங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment