Saturday, August 30, 2014
உடுமலை, : உடுமலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வனத்துறை செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்பட துவங்கும் என வனத்துறை அறிவித்துள்ளது.
உடுமலை அருகே 9/6 செக்போஸ்ட் உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்த செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வரும் வாகனங்கள், இங்கிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் பதிவு செய்து விட்டுத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில், பதிவுக்காக வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அருகில் உள்ள அமராவதி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
அதை தவிர்க்க அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஏழுமலையான் கோயில் சுற்று பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிய செக்போஸ்ட் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த செக்போஸ்ட் கட்டும் பணி முடிந்து மாதக்கணக்கில் செயல்படாமல் கிடந்தது. மேலும் செக்போஸ்ட் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த செக்போஸ்ட் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் உடுமலை வனச்சரக பகுதியில் வன குற்றங்கள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
0 comments:
Post a Comment