Tuesday, August 26, 2014
தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா வரும் 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாள் மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
அதன்பின் தினந்தோறும் காலை 6.30 மணிக்கும், 11 மணிக்கும் தமிழில் திருப்பலி, குணமளிக்கம் வழிபாடு, மதியம் 3 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும், 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், ஒப்புரவு அருட்சாதனமும், 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெறும். மேலும் மறையுரை கருத்துக்களும் வழங்கப்படுகிறது.
இதில் பங்கு தந்தைகள், ஆன்மீக குருக்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் முக்கிய விழா செப்டம்பர் 8–ந்தேதி (திங்கட்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 139–வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 14–வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
அன்று மாலை 4மணிக்கு நற்கருணை ஆராதனையும், 5 மணிக்கு முப்பெரும் விழாகூட்டுத் திருப்பலியும், இரவு 7மணிக்கு அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது. 9–ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 6.30 அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.
இதன் ஏற்பாடுகளை பங்கு தந்தை திருத்தல அதிபர் பிளேஸ்அடிகளார், திருத்தலநிர்வாகி ஆரோக்கியசாமி அடிகளார், உதவி பங்குதந்தை வளன்அடிகளார், ஆன்மீககுரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
-
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
-
உடுமலை அருகே, இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூரில் வெள்ள...
0 comments:
Post a Comment