Tuesday, August 26, 2014

தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா வரும் 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாள் மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
அதன்பின் தினந்தோறும் காலை 6.30 மணிக்கும், 11 மணிக்கும் தமிழில் திருப்பலி, குணமளிக்கம் வழிபாடு, மதியம் 3 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும், 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், ஒப்புரவு அருட்சாதனமும், 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெறும். மேலும் மறையுரை கருத்துக்களும் வழங்கப்படுகிறது.
இதில் பங்கு தந்தைகள், ஆன்மீக குருக்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் முக்கிய விழா செப்டம்பர் 8–ந்தேதி (திங்கட்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 139–வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 14–வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
அன்று மாலை 4மணிக்கு நற்கருணை ஆராதனையும், 5 மணிக்கு முப்பெரும் விழாகூட்டுத் திருப்பலியும், இரவு 7மணிக்கு அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது. 9–ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 6.30 அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.
இதன் ஏற்பாடுகளை பங்கு தந்தை திருத்தல அதிபர் பிளேஸ்அடிகளார், திருத்தலநிர்வாகி ஆரோக்கியசாமி அடிகளார், உதவி பங்குதந்தை வளன்அடிகளார், ஆன்மீககுரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment