Tuesday, August 26, 2014

தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா வரும் 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாள் மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
அதன்பின் தினந்தோறும் காலை 6.30 மணிக்கும், 11 மணிக்கும் தமிழில் திருப்பலி, குணமளிக்கம் வழிபாடு, மதியம் 3 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும், 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், ஒப்புரவு அருட்சாதனமும், 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெறும். மேலும் மறையுரை கருத்துக்களும் வழங்கப்படுகிறது.
இதில் பங்கு தந்தைகள், ஆன்மீக குருக்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் முக்கிய விழா செப்டம்பர் 8–ந்தேதி (திங்கட்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 139–வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 14–வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
அன்று மாலை 4மணிக்கு நற்கருணை ஆராதனையும், 5 மணிக்கு முப்பெரும் விழாகூட்டுத் திருப்பலியும், இரவு 7மணிக்கு அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது. 9–ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 6.30 அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.
இதன் ஏற்பாடுகளை பங்கு தந்தை திருத்தல அதிபர் பிளேஸ்அடிகளார், திருத்தலநிர்வாகி ஆரோக்கியசாமி அடிகளார், உதவி பங்குதந்தை வளன்அடிகளார், ஆன்மீககுரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment