Tuesday, August 26, 2014
மும்பை,
வேலை வாங்கி தருவதாக கூறி காதலியை விபசார விடுதியில் விற்ற வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி மும்பை அழைத்து வந்ததும் அம்பலமானது.
இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் தனது பெற்றோர் வறுமையில் வாடியதால் வேலை தேடி நாசிக் வந்தார். பின்னர், நாசிக்கில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்தநிலையில், அவருக்கும் கிரண் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கிரண் அந்த இளம்பெண்ணிடம், மும்பையில் எனக்கு தெரிந்த வசதியான நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் உன்னை அறிமுகப்படுத்தி வேலை வாங்கி தருகிறேன். மேலும், உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார்.
விபசார விடுதியில்... அவரது ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த பெண் தனது காதலன் கிரணுடன் நாசிக்கில் இருந்து மும்பைக்கு ரெயிலில் வந்தார். பின்னர், அந்த இளம்பெண்ணை மும்பை கிரண் கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள விபச்சார விடுதிக்கு காதலன் அழைத்து சென்றார். இது பற்றி அறியாத அந்த இளம்பெண் இரவு முழுவதும் அங்கு தங்கினார். மறுநாள் காலை விழித்து பார்த்தபோது கிரணை காணவில்லை.
இதனால் திடுக்கிட்ட அந்த பெண், அங்கு இருந்த மற்ற பெண்களிடம் கேட்டார். அப்போது, உன்னுடன் வந்த வாலிபர் உன்னை இங்கு விற்றுவிட்டு சென்றுவிட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
3 பேர் கைது இந்நிலையில் அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரது உதவியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் சமூக குற்றத்தடுப்பு போலீசார் அந்த விபச்சார விடுதியில் சோதனை நடத்தி, அங்கு சிக்கி இருந்த அந்த இளம்பெண் உள்பட 3 பெண்களை மீட்டு டோங்கிரி பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த விபச்சார விடுதி நடத்தி வந்த சல்மா சேக் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றி விபசார விடுதியில் விற்ற அவரது காதலன் கிரணை போலீசார் தேடிவருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment