Saturday, August 30, 2014

அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் கரூர் வைஸ்யா வங்கி உள்ளது. இதில் கேஷியர்களாக லோகேஷ், பிரதீப் ஆகியோர் உள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் வங்கியிலிருந்து 2 பேரும் ரூ.30 லட்சம் பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு மின்னல் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச் சென்றனர்.
மின்னல் ஏரிக்கரை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்தனர். அவர்கள் திடீரென லோகேஷ், பிரதீப் சென்ற பைக்கை வழிமறித்து நிறுத்தினர்.
இதையடுத்து வேகமாக இறங்கிய அவர்கள், லோகேசையும், பிரதீப்பையும் கத்தியால் வெட்டினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சுதாரிக்க முயல்வதற்குள் அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கேஷியர்கள் கத்தி கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. காயமடைந்த கேஷியர்கள் 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி. கண்ணப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி கேஷியர்களை கத்தியால் வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
0 comments:
Post a Comment