Saturday, August 30, 2014

அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் கரூர் வைஸ்யா வங்கி உள்ளது. இதில் கேஷியர்களாக லோகேஷ், பிரதீப் ஆகியோர் உள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் வங்கியிலிருந்து 2 பேரும் ரூ.30 லட்சம் பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு மின்னல் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச் சென்றனர்.
மின்னல் ஏரிக்கரை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்தனர். அவர்கள் திடீரென லோகேஷ், பிரதீப் சென்ற பைக்கை வழிமறித்து நிறுத்தினர்.
இதையடுத்து வேகமாக இறங்கிய அவர்கள், லோகேசையும், பிரதீப்பையும் கத்தியால் வெட்டினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சுதாரிக்க முயல்வதற்குள் அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கேஷியர்கள் கத்தி கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. காயமடைந்த கேஷியர்கள் 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி. கண்ணப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி கேஷியர்களை கத்தியால் வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment