Saturday, August 30, 2014
பொள்ளாச்சி, : பொள் ளாச்சி அருகே, வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள மன்றாம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் கஜேந்திரன் (28). இவர் விவசாய தொழிலோடு தனியார் காப்பீட்டு நிறுவன ஊழியராகவும் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில், வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஆறுச்சாமி என்பவரது தோட்டத்து கிணற்றில் வாலிபர் ஒருவர் ரத்தகாயத்துடன் ஆடைகளின்றி பிணமாக கிடந்ததை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தக வல் அறிந்ததும் பொள்ளாச்சி டிஎஸ்பி., முத்துராஜன், நெகமம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ.,செந்தில்வேல், பெரு மாள் உட்பட போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் இருந்த பிரேதத்தை மீட்டு வெளியே கொண்டு வந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கஜேந்திரன் என்பது தெரிய வந்தது. அவரது மார்பு, வயிறு, கழுத்து மற்றும் முதுகு பகுதி என உடலின் பல இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டிருந்தது. கஜேந்திரனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கஜேந்திரன் பிரேதம் கிடந்த கிணற்று பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருநெல்லி வாய்க்கால்மேட்டு பகுதியில் ரத்தக்கறை இருந்தது. மேலும், பிராந்தி பாட்டில்கள் சிதறி கிடந்தது. ஆகவே கொலையாளிகள் கஜேந்திரனை வீட்டிலிருந்து வரைவழைத்து, குருநெல்லி பாளையம் வாய்கால் மேட்டு பகுதியில் வைத்து, கத்தியால் குத்தி கொலை செய்து, பின் கிணற்றில் வீசிச் சென்றிருக்கலாம் என்றனர்.
கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...

0 comments:
Post a Comment