Wednesday, August 06, 2014
திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையின் தணிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் என அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய உட்கோட்டங்களில் முறையே . 94, 389, 93,94, 142. ஆக மொத்தம் 812. வாகனங்களை ஏலம் விட்டு அத்தொகையையை அரசுக்கு சேர்ப்பது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தும் , மாவட்ட அரசிதழில் வெளியிட்டும் , வாகனங்களை எவரும் உரிமை கோராததால் . மேற்கண்ட , வாகனங்களுக்கு உத்தேச மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தானியங்கி ,செயட்பொறியாளர் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயட்பொறியாளர் , மோட்டார் வாகன ஆய்வாளர் [GR -I ] ஆகியோர்களால் நேற்று -05-08-2014. 330 . வாகனங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டது . மீதமுள்ள 482. வாகனங்களுக்கு . வருகிற [ 07-08-2014] அன்று மதிப்பீடு செய்யப்படும் மதிப்பீடும் பனி நிறைவுற்றதும் மேற்கண்ட 812, வாகனங்கள் விரைவில் பொது ஏலம் விடப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . அமித்குமார் சிங் . இ .கா .ப அவர்கள் தெரிவித்தார்
