Tuesday, August 19, 2014
திருப்பூர்  ஆக 19:
தாராபுரம், : தாராபுரத்தில் இரும்பு குடோனில் பொருட்களை திருடிய 6 வயது சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
 

 
 
 
0 comments:
Post a Comment