Tuesday, August 19, 2014
திருப்பூர் ஆக 19:
தாராபுரம், : தாராபுரத்தில் இரும்பு குடோனில் பொருட்களை திருடிய 6 வயது சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment