Tuesday, August 19, 2014
திருப்பூர் ஆக 19:
தாராபுரம், : தாராபுரத்தில் இரும்பு குடோனில் பொருட்களை திருடிய 6 வயது சிறுவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
தாராபுரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் இவருக்கு குடோன் ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக குடோனில் இருந்த பொருட்கள் சிறிது சிறிதாக காணாமல் போய்க் கொண்டிருந்தது.
இந்நிலையில் பெருமாள் நேற்று காலை 6 மணிக்கு குடோனுக்கு வந்தபோது குடோனுக்குள் 6 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் சிறுவன் போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்த சிறுவன் அவனது அண்ணனுடன் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். இவர்கள் இருவரையும் இவரது அப்பாதான் திருட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.
பழைய இரும்பு கடைகள் இருக்கும் இடங்களுக்கு சென்று கதவு அல்லது தடுப்புகளில் சிறிய ஓட்டை போட்டு அதில் சிறுவர்களை நுழைய வைத்து, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அவனது அப்பா, அண்ணன் ஆகியோர் பெயர்களை மாற்றி மாற்றி கூறுகிறான். திண்டுக்கல்லில் உள்ள வீட்டு முகவரியும் தெரியாது என்கிறான். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பள்ளிக்கு அனுப்பாமல் திருட்டு குற்றத்தில் ஈடுபட வைத்து சிறுவனின் வாழ்க்கை பாதையை தந்தையே திசைதிருப்பியது அதிர்ச்சியாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment