Tuesday, August 19, 2014
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாயிலும், 7–ந் தேதி முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் கனியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான வழிபாட்டுதல்கள் மற்றும் விதைகள், உரங்கள், இடுபொருட்கள் வழங்கும் பணியில் மடத்துக்குளம் வேளாண்மை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மை அதிகாரி கூறியதாவது:–
தற்போது அமராவதி அணையில் இருந்து 120 நாட்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தகுந்தபடி பயிர் ரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே மத்திய ரக நெல் பயிர்களான ஏஎஸ்டி–16, ஏடிடி–39, ஏடிடி–45 ஆகிய ரகங்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 15–ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகிறது. அது பூக்கள் பால் பிடிக்கும் தருணம் என்பதால் பயிர்களுக்கு இடப்படும் உரங்களின் யூரியாவின் அளவினை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவும்.
பயிர்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும், சத்தினையும் வழங்கக்கூடிய பொட்டாஷ் உரங்களை அடி உரமாக பயன்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது ஏடிடி–39, ஏடிடி–45 நெல் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மேலும் தேவையான அளவு உயிர் உரங்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment