Tuesday, August 19, 2014

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாயிலும், 7–ந் தேதி முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் கனியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான வழிபாட்டுதல்கள் மற்றும் விதைகள், உரங்கள், இடுபொருட்கள் வழங்கும் பணியில் மடத்துக்குளம் வேளாண்மை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மை அதிகாரி கூறியதாவது:–
தற்போது அமராவதி அணையில் இருந்து 120 நாட்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தகுந்தபடி பயிர் ரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே மத்திய ரக நெல் பயிர்களான ஏஎஸ்டி–16, ஏடிடி–39, ஏடிடி–45 ஆகிய ரகங்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 15–ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகிறது. அது பூக்கள் பால் பிடிக்கும் தருணம் என்பதால் பயிர்களுக்கு இடப்படும் உரங்களின் யூரியாவின் அளவினை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவும்.
பயிர்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும், சத்தினையும் வழங்கக்கூடிய பொட்டாஷ் உரங்களை அடி உரமாக பயன்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது ஏடிடி–39, ஏடிடி–45 நெல் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மேலும் தேவையான அளவு உயிர் உரங்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
0 comments:
Post a Comment