Tuesday, August 19, 2014

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி முதல் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாயிலும், 7–ந் தேதி முதல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் கனியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான வழிபாட்டுதல்கள் மற்றும் விதைகள், உரங்கள், இடுபொருட்கள் வழங்கும் பணியில் மடத்துக்குளம் வேளாண்மை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மை அதிகாரி கூறியதாவது:–
தற்போது அமராவதி அணையில் இருந்து 120 நாட்களுக்கு முறைப்பாசன அடிப்படையில் தண்ணீர் திறந்து விடுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தகுந்தபடி பயிர் ரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே மத்திய ரக நெல் பயிர்களான ஏஎஸ்டி–16, ஏடிடி–39, ஏடிடி–45 ஆகிய ரகங்களை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 15–ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குகிறது. அது பூக்கள் பால் பிடிக்கும் தருணம் என்பதால் பயிர்களுக்கு இடப்படும் உரங்களின் யூரியாவின் அளவினை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தவும்.
பயிர்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும், சத்தினையும் வழங்கக்கூடிய பொட்டாஷ் உரங்களை அடி உரமாக பயன்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது ஏடிடி–39, ஏடிடி–45 நெல் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. மேலும் தேவையான அளவு உயிர் உரங்கள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment