Tuesday, August 19, 2014
திருப்பூரில் தங்கியிருக்கும் நைஜீரியர்களால் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி கட்சியினர் அளித்த கோரிக்கை மனு:
திருப்பூர் நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் மற்றும் இதரக் கழிவுகளைக்கொட்டி ஆற்றை மாசுப்படுத்தி வருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து சேதம் உண்டாகிறது.
சங்கிலிப்பள்ளம், நொய்யலாற்றில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதால், உடனடியாக தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
திருப்பூரில் நைஜீரியர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்குவதை கட்டுப்படுத்தவும், அவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பாதிக்காமல் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment