Wednesday, August 20, 2014
திருப்பூர் ஆக 20:
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூரில் 800 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில் திருப்பூர் தெற்குப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் மாநிலப் பொதுச்செயலாளர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு, இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜெ.எஸ்.கிஷோர்குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருப்பூரில் 800 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் வடக்குப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜெ.எஸ்.கிஷோர்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை, ஆன்மிகச் சொற்பொழிவு, அன்னதானம், மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 31- ஆம் தேதி மாலை 4 மணியளவில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. திருப்பூர், தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகில் இருந்தும், மங்கலம் சாலை, கே.வி.ஆர். நகர் பகுதியில் இருந்தும், புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ஆலாங்காடு பகுதியில் நிறைவு விழா நடைபெற உள்ளது.
நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து தலைமை வகிக்க உள்ளார். காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார். பாஜக நாடாளுமன்ற செயலாளர் வி.சண்முகநாதன் சிறப்புரையாற்ற உள்ளார். இதையொட்டி, வரும் 21- ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாலை அணிந்து, காப்புக்கட்டி விரதத்தை தொடங்க உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment