Wednesday, August 20, 2014
திருப்பூர் ஆக 20:
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூரில் 800 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில் திருப்பூர் தெற்குப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இந்து முன்னணி அலுவலகத்தில் அதன் மாநிலப் பொதுச்செயலாளர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு, இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜெ.எஸ்.கிஷோர்குமார், தாமு ஜி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருப்பூரில் 800 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் வடக்குப் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜெ.எஸ்.கிஷோர்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், திருவிளக்கு பூஜை, ஆன்மிகச் சொற்பொழிவு, அன்னதானம், மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 31- ஆம் தேதி மாலை 4 மணியளவில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. திருப்பூர், தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகில் இருந்தும், மங்கலம் சாலை, கே.வி.ஆர். நகர் பகுதியில் இருந்தும், புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ஆலாங்காடு பகுதியில் நிறைவு விழா நடைபெற உள்ளது.
நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து தலைமை வகிக்க உள்ளார். காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் முன்னிலை வகிக்கிறார். பாஜக நாடாளுமன்ற செயலாளர் வி.சண்முகநாதன் சிறப்புரையாற்ற உள்ளார். இதையொட்டி, வரும் 21- ஆம் தேதி கோட்டை மாரியம்மன் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாலை அணிந்து, காப்புக்கட்டி விரதத்தை தொடங்க உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment