Monday, August 25, 2014

ஏழ்மையில் உள்ள முதியோர்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் தோறும் கடந்த தி.மு.க., ஆட்சியில் ரூ.500 வழங்கப்பட்டது. 2011 ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இத்தொகை ரூ ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து முதியோர் ,மற்றும் விதவைகள் அரசு சார்ந்த உதவி தொகைகளை பெற்று வந்தனர் .இந்நிலையில் உதவி தொகை பெற தகுதி இல்லாதவர்களின் பட்டியலை தயாரிக்க வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அந்த பட்டியலை ஒட்டிய அதிகாரிகள் தகுதி வாய்ந்த பயனாளிகள் பலரையும் தகுதியற்ற பட்டியலில் சேர்த்து விட்டனர் .இதனால் அதிக ஆண்டுகளாக உதவி தொகை பெற்றவர்கள் கூட தங்களை பட்டியலில் இருந்து நீக்கியது ஏன் என தெரியாமல் உள்ளனர் .மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்க வந்தனர் .அந்த மனுவையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பெற்றுக்கொண்டனர் .முதியோர் உதவி தொகைக்கு மட்டுமல்லாது விதவை உதவி தொகைக்கும் வேட்டு வைத்து விட்டனர் .போலியான பயனாளிகளை கண்டறிவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .ஆனால் உண்மையான் பயனாளிகளை களை எடுக்க நினைப்பது வேதனைக்குரியது .அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது என்பதற்காக முதியோர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது .வருவாய் துறை அமைச்சரும் ,மாவட்ட ஆட்சியரும் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment