Monday, August 11, 2014
திருப்பூர்,ஆக.11
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னலாடை உற்பத்திக்கு உதவும் உபகரணப்பொருட்கள் அறிமுகமாகியுள்ள ‘நிட்ஷோ&2014’ கண்காட்சியை திருப்பூரில் நேற்று தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினருக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ‘நிட்ஷோ’ கண்காட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 14வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் சந்திரன் தலைமையில், தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.பி.கோவிந்தசாமி, பின்னலாடை துணி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அகில் ரத்னசாமி, திருப்பூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் அகில் மணி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜா சண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பி.முத்துரத்தினம் உட்பட பலர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தி பேசினர். கட்சி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...