Friday, August 29, 2014
போலீஸ் காவலில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியாக போலீஸார் தொந்தரவு செய்தது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சேர்ந்த பி.ராஜகுமாரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது அப்பா பெயர் செல்லையா. எனது அம்மா பெயர் சி.சந்திரா. எனக்கு திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறேன். என் அப்பா நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர் என்னுடன் வசித்து வருகிறார்.
எனது தாய் உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி எனது அம்மா வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அதற்காக போலீஸôர் என்னை விசாரணை செய்கின்றனர் என்று என் அம்மா எனக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்காக என்னையும், இறந்த வீட்டு உரிமையாளரின் மருமகள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளதாக என் அம்மா தொலைபேசியில் தெரிவித்தார். மேலும், போலீஸார் என்னை விசாரணைக்காக கோவைக்கு 12-ஆம் தேதி அழைத்துச் செல்வதாகவும் எனது அம்மா தெரிவித்தார்.
ஆனால், கோவை சிறைக்கு அழைத்துச் செல்லாமல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். எனவே, போலீஸ் காவலில் வைத்து அவரை சித்ரவதை செய்தது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸ் காவலின் போது மனுதாரரின் தாய்க்கு உடல் ரீதியாக நடந்த தொந்தரவுகள் குறித்து கோவை மாவட்ட தலைமை நீதிபதி அல்லது அவரது மூலம் நியமிக்கப்பட்ட பொறுப்பான நீதிமன்ற அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
மாநிலம் அல்லது மத்திய அரசின் மருத்துவமனை பெண் உதவியாளர் உதவியுடன் அவரை பரிசோதனை செய்து செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment