Friday, August 29, 2014
போலீஸ் காவலில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியாக போலீஸார் தொந்தரவு செய்தது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சேர்ந்த பி.ராஜகுமாரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது அப்பா பெயர் செல்லையா. எனது அம்மா பெயர் சி.சந்திரா. எனக்கு திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறேன். என் அப்பா நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர் என்னுடன் வசித்து வருகிறார்.
எனது தாய் உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி எனது அம்மா வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அதற்காக போலீஸôர் என்னை விசாரணை செய்கின்றனர் என்று என் அம்மா எனக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்காக என்னையும், இறந்த வீட்டு உரிமையாளரின் மருமகள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளதாக என் அம்மா தொலைபேசியில் தெரிவித்தார். மேலும், போலீஸார் என்னை விசாரணைக்காக கோவைக்கு 12-ஆம் தேதி அழைத்துச் செல்வதாகவும் எனது அம்மா தெரிவித்தார்.
ஆனால், கோவை சிறைக்கு அழைத்துச் செல்லாமல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். எனவே, போலீஸ் காவலில் வைத்து அவரை சித்ரவதை செய்தது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸ் காவலின் போது மனுதாரரின் தாய்க்கு உடல் ரீதியாக நடந்த தொந்தரவுகள் குறித்து கோவை மாவட்ட தலைமை நீதிபதி அல்லது அவரது மூலம் நியமிக்கப்பட்ட பொறுப்பான நீதிமன்ற அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
மாநிலம் அல்லது மத்திய அரசின் மருத்துவமனை பெண் உதவியாளர் உதவியுடன் அவரை பரிசோதனை செய்து செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment