Friday, August 29, 2014
போலீஸ் காவலில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியாக போலீஸார் தொந்தரவு செய்தது குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சேர்ந்த பி.ராஜகுமாரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது அப்பா பெயர் செல்லையா. எனது அம்மா பெயர் சி.சந்திரா. எனக்கு திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறேன். என் அப்பா நோய்வாய்ப்பட்டுள்ளதால் அவர் என்னுடன் வசித்து வருகிறார்.
எனது தாய் உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி எனது அம்மா வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுவிட்டார். அதற்காக போலீஸôர் என்னை விசாரணை செய்கின்றனர் என்று என் அம்மா எனக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்காக என்னையும், இறந்த வீட்டு உரிமையாளரின் மருமகள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளதாக என் அம்மா தொலைபேசியில் தெரிவித்தார். மேலும், போலீஸார் என்னை விசாரணைக்காக கோவைக்கு 12-ஆம் தேதி அழைத்துச் செல்வதாகவும் எனது அம்மா தெரிவித்தார்.
ஆனால், கோவை சிறைக்கு அழைத்துச் செல்லாமல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். எனவே, போலீஸ் காவலில் வைத்து அவரை சித்ரவதை செய்தது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, போலீஸ் காவலின் போது மனுதாரரின் தாய்க்கு உடல் ரீதியாக நடந்த தொந்தரவுகள் குறித்து கோவை மாவட்ட தலைமை நீதிபதி அல்லது அவரது மூலம் நியமிக்கப்பட்ட பொறுப்பான நீதிமன்ற அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
மாநிலம் அல்லது மத்திய அரசின் மருத்துவமனை பெண் உதவியாளர் உதவியுடன் அவரை பரிசோதனை செய்து செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment