Tuesday, August 26, 2014
தோஷம் கழிப்பதாக விவசாயியிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவான ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார்.
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார்.
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment