Monday, August 11, 2014

On Monday, August 11, 2014 by Unknown in , ,

திருப்பூர் ஆக 11.  திருப்பூர்  மாவட்டம்  காங்கயம்  ஊதியூர் , அவினாசிபாளையம்  காவல்நிலைய  சரகதிட்குட்பட்ட  பகுதிகளில்  கால்நடைகள்  திருட்டு  போவது  சம்மந்தமாக  திருப்பூர்  மாவட்ட  கண்காணிப்பாளர்  திரு . அமித்குமார் சிங்  உத்தரவின்  பேரில்  எதிரிகளை  கைது  செய்யும்  பொருட்டு  தனிப்படை  அமைக்கபட்டு  குற்றவாளிகளை  மாவட்ட  காவல்  துறையினர்  தேடிவந்தனர் . இச்சூழலில்  கடந்த  10-8-2014 அன்று  அதிகாலை அவினாசிபாளையம்  காவல்  நிலையதிட்குட்பட்ட   வெள்ளிமலை  பகுதியில்  காவல்துறையினர்  வாகன  தணிக்கையில்  ஈடுபட்டிருக்கும் போது  அவ்வழியாக  சந்தேகதிட்கிடமாக  கால்நடைகளை  ஏற்றி  வந்த  வாகனத்தின்  ஓட்டுனர்  ஜீவானந்தம்  மற்றும் பிரசாந்த் [எ ] சுள்ளான்   ஆகியோரை  விசாரணை  செய்தபோது  கால்நடை   திருடர்கள்  என  தெரியவந்தது  .மேலும்  அவர்களிடமிருந்து  ஒரு  மாடு  இரு  கன்றுகுட்டிகள் . பறிமுதல்  செய்யப்பட்டது .  மேலும்  பல்லடம்  காவல் நிலைய  சரகதிட்குட்பட்ட   பகுதியில்  விசைத்தறி  சம்மந்தமாக  நாட்டிங் , மிசின்  திருடி  விற்பனை  செய்ய  முயன்ற  ராஜா  த/பெ . கருப்பையா  முகம்மது இர்பான் .த/பெ . தொமியா  முத்து  ஆகியோரை  கைது  செய்தும்  அவர்களிடமிருந்து  ரூபாய் . 2.00.000/  . மதிப்புள்ள  நாட்டிங்  மெசின்  பறிமுதல்  செய்யப்பட்டது .  மேற்கண்ட  இரு  வழக்குகளின்  எதிரிகள்   நீதிமன்ற  காவலுக்கு  உட்படுத்தப்பட்டனர் .