Thursday, August 28, 2014
ஈரோடு: நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும், என்று, சி.ஐ.டி.யு., கேட்டு கொண்டுள்ளது. ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு., பொது செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
அரசாணைக்கும், நடைமுறைக்கும் மாறாக, தன்னிச்சையாக விதிகளை உருவாக்கி, நல வாரியத்தை சீர்கேட்டுக்கு உள்ளாக்கி உள்ள தொழிலாளர் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும். தொழிலாளர்களிடம் பெற்ற மனுக்களில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொடுப்பதற்காக, உரியவர்களிடம் கொடுத்திட வேண்டும். அனைத்து வகை சலுகைகளுக்காகவும் விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களுக்கு, கால தாமதம் இன்றி, சலுகை தொகை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும், இரண்டாம் தேதி தொழிலாளர் அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதுபோல் வரும், 11ம் தேதி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தவறும் பட்சத்தில் ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடக்கும், என்றார். அதன் பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
மும்பை : பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி கொள்ளும் வழக்கம் தற்ப...
0 comments:
Post a Comment