Thursday, August 28, 2014
ஈரோடு: நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும், என்று, சி.ஐ.டி.யு., கேட்டு கொண்டுள்ளது. ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு., பொது செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
அரசாணைக்கும், நடைமுறைக்கும் மாறாக, தன்னிச்சையாக விதிகளை உருவாக்கி, நல வாரியத்தை சீர்கேட்டுக்கு உள்ளாக்கி உள்ள தொழிலாளர் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும். தொழிலாளர்களிடம் பெற்ற மனுக்களில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொடுப்பதற்காக, உரியவர்களிடம் கொடுத்திட வேண்டும். அனைத்து வகை சலுகைகளுக்காகவும் விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களுக்கு, கால தாமதம் இன்றி, சலுகை தொகை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும், இரண்டாம் தேதி தொழிலாளர் அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதுபோல் வரும், 11ம் தேதி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தவறும் பட்சத்தில் ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடக்கும், என்றார். அதன் பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment