Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு, ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூத்தன் மகள் மரப்பாலம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் பாலு (எ) பாலசுப்பிரமணியம், 22. இருவரும் நெருக்கமாக பழகினர். ஆசை வார்த்தை கூறி, இருவரும், சுற்றித்திரிந்தனர். இதை அறிந்து, பெண் குடும்பத்தினர், திருமணம் செய்து கொள்ளுமாறு, பாலுவிடம் கூறினர். மூன்று மாதங்கள் கழித்து, திருமணம் செய்வதாக பாலு தெரிவித்தார். மூன்று மாதத்துக்கு பின்னரும், திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து, அனைத்து மகளிர் போலீஸில், புகார் செய்ய ப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பாலுவை தேடினர். தகவல் அறிந்த பாலு, ஈரோடு இரண்டாம் எண் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

0 comments: