Thursday, August 14, 2014

சுதந்திர தின விழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோட்டிலும் சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது.
விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழும், சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஒத்திகை
இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நேற்று காலை ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது. இதில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம், கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம், சித்தோடு அரசு மேல்நிலைப்பள்ளிக் கூடம், பவானி அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம், திண்டல் பி.வி.பி. பள்ளிக்கூடம், ரங்கம்பாளையம் கொங்கு பள்ளிக் கூடம், திண்டல் வேளாளர் மெட்ரிக் பள்ளிக்கூடம், இந்தியன் பப்ளிக் பள்ளிக்கூடம், கிறிஸ்து ஜோதி மெட்ரிக் பள்ளிக்கூடம் ஆகிய பள்ளிக்கூடங்களை சேர்ந்த 1,535 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு நடன கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை செய்தனர். இந்த கலை நிகழ்ச்சி ஒத்திகையை ஈரோடு ஆர்.டி.ஓ. குணசேகரன், மண்டல துணை தாசில்தார் ஜெயக் குமார், வருவாய் ஆய்வாளர் சங்கர் கணேஷ், மாவட்ட கல்வி ஆய்வாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி கீதா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment