Friday, August 08, 2014
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகோ இன்று பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் லேசான மயக்கமும் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு அவரது உதவியாளர் தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டு வந்தது. வைகோ சென்ற கார் கோவளம் சுங்கச்சாவடியில் நின்றது. அங்கு வந்த ஆம்புலன்சில் வைகோவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். வைகோவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது'' என்று கூறியுள்ளனர்.
வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தொண்டர்களிடம் பரவியது. ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
