Friday, August 08, 2014
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகோ இன்று பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் லேசான மயக்கமும் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு அவரது உதவியாளர் தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டு வந்தது. வைகோ சென்ற கார் கோவளம் சுங்கச்சாவடியில் நின்றது. அங்கு வந்த ஆம்புலன்சில் வைகோவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். வைகோவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது'' என்று கூறியுள்ளனர்.
வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தொண்டர்களிடம் பரவியது. ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...