Sunday, August 10, 2014
On Sunday, August 10, 2014 by farook press in Break, Coimbatore
விருதுநகர் மாவட்டம் மீனாகுளம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் விஜயரங்கன். இவரது மகன் விஜயகுமார்(வயது 18). இவர் கோவை பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்து சென்ட்ரிங் வேலைசெய்து வந்தார்.
அவருடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(26) உள்பட சிலர் தங்கியிருந்தனர். நேற்று இரவு சாப்பிட்டதும் தூங்கச்சென்றனர். ஆனால் விஜயகுமார் உள்பட சிலர் தங்களது செல்போனில் படம் பார்த்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது முத்துப் பாண்டி 'எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் சத்தம் போடாமல் இருங்கள்’ என்றார். இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டிக்கும், விஜயகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் விஜயகுமார் ஆத்திரமடைந்து முத்துப் பாண்டியை தாக்கினார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் இருவரும் தூங்கச்சென்று விட்டனர். இருப்பினும் வயதில் குறைந்த விஜயகுமார் நம்மை தாக்கி விட்டானே என்ற ஆத்திரம் முத்துப்பாண்டியின் உள்மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
இன்று அதிகாலை எழுந்த முத்துப்பாண்டி அங்கு கிடந்த சம்மட்டியை எடுத்து தூங்கிகொண்டிருந்த விஜயகுமாரின் முகத்தில் ஓங்கி அடித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் உயிருக்கு போராடினார். விஜயகுமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிக்கொண்டிருந்த நண்பர்கள் பதறி எழுந்தனர்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயகுமாரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முத்துப்பாண்டியை தேடி வருகிறார்கள்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...