Sunday, August 10, 2014
On Sunday, August 10, 2014 by farook press in Break, திருப்பூர்
உடுமலை பழனி மெயின்ரோடு நாராயணன் காலனி பகுதியில் வசிப்பவர் லீலாவதி (வயது 65). இவரது கணவர் லட்சுமண செட்டியார் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்களும் 1 மகனும் உள்ளனர். மகள் கிருஷ்ணவேணி அனச்சம் நகரில் வசித்து வருகிறார்.
வீட்டில் தனியாக இருந்த லீலாவதி வீட்டின் அருகே மீன் கடை நடத்தி வந்தார். கடந்த 2 நாட்களாக லீலாவதியின் நடமாட்டம் வெளியில் இல்லை. அடிக்கடி மகள் வீட்டுக்கு லீலாவதி செல்வார் . கடந்த 2 நாட்களாக அங்கும் அவர் செல்லவில்லை.
இதனால் சந்தேகமடைந்த மகள் கிருஷ்ணவேணி நேற்று மாலை லீலாவதியைப் பார்க்க நாராயணன் காலனிக்கு வந்தார். லீலாவதியின் வீடு வெளியில் திறந்து கிடந்தது. தாயை அழைத்தவாறு உள்ளே சென்று கிருஷ்ணவேணி பார்த்த போது அங்கு ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது.
அந்த அறையை தட்டிப்பார்த்து தாயை கிருஷ்ணவேணி அழைத்தார். ஆனால் எந்த பதிலும் லீலாவதியிடமிருந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கிருஷ்ணவேணி அந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தார்.
அங்கு லீலாவதி படுகாயங்களுடன் பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி அலறி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இது பற்றி உடுமலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் தவமணி, வைத்தியலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பூட்டிக் கிடந்த வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே சென்று போலீசார் பார்வையிட்டனர். அப்போது லீலாவதியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு யாரோ அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. ஆனால் அவரது கழுத்தில் கிடந்த நகையும், காதில் அணிந்திருந்த தோடும் அப்படியே இருந்தது.
எனவே எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது சந்தேகமாக உள்ளது. கடந்த 8–ந் தேதி இரவு வரை லீலாவதியின் நடமாட்டம் வெளியில் இருந்துள்ளது. அதன் பின்னரே அவர் வெளியில் நடமாடவில்லை. எனவே 8–ந் தேதி இரவோ அல்லது நேற்று பகலிலோ இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரியவருகிறது.
கொள்ளையர்கள் யாராவது இந்த கொலையை செய்திருக்கலாம் என்று நினைத்தால் அதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால் வீட்டில் உள்ள பொருட்களும் லீலாவதி அணிந்திருந்த நகைகளும் கொள்ளை போகவில்லை.
எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. அதன் பேரில் உடுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
