Tuesday, August 26, 2014
தமிழகம் என
பெயர் சூட்டி மகிழ்ந்த தலைவர் ,சுயமரியாதை திருமணங்களை சட்ட பூர்வமாக்கிய
பண்பாளர் ,மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் ,தென்னகத்தின்
பெர்னாட்ஷா என போற்றப்படகூடியவர் ,திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக
முன்னெடுத்து செல்வதில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்தவரின் சிலை
இன்று அலங்கோலமாக காட்சி அளிக்கிறது
சிலையின்
முன் பகுதியிலே சினிமா போஸ்டர்களும் ,அரசியல் கட்சியினரின் போஸ்டர்களும்
மாறி மாறி ஒட்டப்படுகிறது .சிலையின் தலைப்பகுதிக்கு மேலே இருந்த மின்
விளக்கு காணமல் போய் வெறும் வயர் மட்டும் தொங்கி கொண்டு இருக்கிறது
ஏழைகளின்
சிரிப்பில் இறைவனை கண்ட அணையா விளக்காம் அண்ணாவின் சிலை இருளில் கிடக்கிறது
.விழா என்றால் மட்டும் ஆளுயர மாலைகளை சுமந்து கொண்ட அண்ணனை காண வரும்
தம்பிகள் மற்ற நேரங்களில் அண்ணாவை மறக்கலாமா ?
மாவட்ட
.மாநகராட்சி நிர்வாகமாவது முன்னாள் முதல் அமைச்சர் என்ற முறையிலாவது
சிலையினை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .சிலை மீது போஸ்டர் ஒட்ட தடை
விதிக்க வேண்டும் .வருகிற செப் 15 பிறந்த நாளிற்குல்லாவது இதனை செயலபடுத்த
வேண்டும் ,
எதையும் தாங்கும்
இதயம் இதையும் தாங்கிட தான் வேண்டும் என்ற நிலை மாற்றிட வேண்டும்
,அண்ணாவின் உடன் பிறப்புகளும் ,அண்ணாவை கொடியில் வைத்து இருக்கும் ஆளும்
கட்சியினரும் தாமாக முன் வந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment