Thursday, September 18, 2014
தஞ்சையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
போக்குவரத்துப்பிரிவு போலீசார் சோதனை
பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்(ஏர்ஹாரன்) பொருத்தக்கூடாது என்று சட்டவிதி உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படாமல் பெரும்பாலான பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குறுகலான சாலைகளிலும் தனியார் பஸ்கள் அதிக ஒலியை எழுப்பி கொண்டு செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையோரம் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் இருந்து பயத்தில் கீழே விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.
இதனால் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பானை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை நகர போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியிலும், தஞ்சை பழைய பஸ் நிலையம், தொம்மங்குடிசை ஆகிய பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழிமறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டப்படி நடவடிக்கை
மேலும் இது போன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என்று பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது குறித்து போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் அந்த வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.
போக்குவரத்துப்பிரிவு போலீசார் சோதனை
பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்(ஏர்ஹாரன்) பொருத்தக்கூடாது என்று சட்டவிதி உள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படாமல் பெரும்பாலான பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான் தான் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குறுகலான சாலைகளிலும் தனியார் பஸ்கள் அதிக ஒலியை எழுப்பி கொண்டு செல்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், சாலையோரம் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் இருந்து பயத்தில் கீழே விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.
இதனால் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பானை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சை நகர போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியிலும், தஞ்சை பழைய பஸ் நிலையம், தொம்மங்குடிசை ஆகிய பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வழிமறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் 12 தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை போக்குவரத்துப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சட்டப்படி நடவடிக்கை
மேலும் இது போன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது என்று பஸ் டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது குறித்து போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் அந்த வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment