Wednesday, September 17, 2014
நாகர்கோவில் கீழபெருவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகள் தேவிகலா (வயது 17) பிளஸ்–2 படித்துள்ளார். இவர் கடந்த 9–ந்தேதி முப்பந்தல் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் சுப்பிரமணியம் புகார் செய்தார். இந்தநிலையில் மறுநாள் போலீஸ் நிலையத்தில் தேவிகலா ஆஜரானார். அப்போது தோவாளை கமல் நகரை சேர்ந்த சரவணன் (31) என்பவரை காதலிக்கிறேன். வீட்டில் கண்டித்ததால், உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வந்தேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேவிகலாவை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று தோவாளையில் திருமண வயதை எட்டாத தேவிகலா–சரவணன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராஜபதிக்கு தகவல் வந்தது. உடனே அவர் உத்தரவின் பேரில் அலுவலர் அஜிதா, தோவாளை கிராம நிர்வாக அதிகாரி கலைவாணி, ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது தெரிய வந்தது. தேவிகலாவுக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தேவிகலா மற்றும் சரவணன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தேவிகலாவுக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்யலாம். அதற்கு முன்பு திருமணம் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment