Wednesday, September 17, 2014
சபரிமலை அய்யப்பன் கோவிலில் செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் நடத்தப்பட்ட அஷ்ட மங்கல்ய தேவ பிரசன்ன உத்தரவு படியான பரிகார பூஜைகள் நேற்று திருவனந்தபுரம் பத்ம நாப சாமி கோவிலில் தொடங்கியது.
அருள் வாக்கு கேட்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடத்தப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள், கட்டுமான பணிகள் தொடர்பாக செறுவள்ளி நாராயணன் நம்பூதிரி தலைமையில் கடந்த ஜூன் 18– ந் தேதி முதல் 3 தினங்கள் சபரிமலை சன்னிதானத்தில் தேவபிரசன்னம் (தெய்வ அருள் வாக்கு கேட்டல்) பார்க்கப்பட்டது. அப்போது கேரளாவில் உள்ள பிரபல கோவில்களில் பரிகார பூஜைகள் நடத்த அருள் வாக்கு கூறப்பட்டது.
பரிகார பூஜை
அதன் படி நேற்று பரிகார பூஜைகள் தொடங்கியது. திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் காலை 9.30 மணியளவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில், முதலில் அக்ரக சாலை கணபதி கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சாமியின் ஆசிர் வாதத்துடன், நாலம்பலகத்தினுள் சென்று, நரசிங்க சாமியை வழிபாடு நடத்திய பின், பத்மநாபனுக்கு துளசி மாலை சாத்தி, பால் பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்பலத்தை சுற்றி வலமாக வந்து கிருஷ்ண பகவானை தொழுது வணங்கி வழிபாடு நடத்திய பின், தர்ம சாஸ்தா கோவிலுக்கு சென்று, நீராஞ்சனம் வழிபாடு நடத்தப்பட்டது. பரிகார பூஜையின் போது பத்மநாபனுக்கு பால்பாயாசம் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நரசிங்க மூர்த்திக்கு புஷ்பாஞ்சலியும், கணபதிக்கு ஹோமமும் நடத்தப்பட்டது. ஆஞ்சநேய சாமிக்கு வெண்ணை முழுக்காப்பும், தர்ம சாஸ்தாவிற்கு நீராஞ்சனம் வழிபாடுகளும் நடத்தப்பட்டது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் தலைமையில் உறுப்பினர்கள் சுபாஷ் வாசு, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.கெ. குமாரன், கமிஷனர் வேணுகோபால் ஐ.ஏ.எஸ், தலைமை பொறியாளர் ஜோலி உல்லாஸ், சபரிமலை செயல் அதிகாரி ஜெயகுமார், பத்மநாபசாமி கோவில் செயல் அலுவலர் கெ.என். சதீஷ், பாதுகாப்பு அதிகாரி ஜெ. சுகுமாரபிள்ளை, சபரிமலை முன்னாள் மேல் சாந்தியும், பத்மநாபசாமிகோவில் சாந்தியுமான கோசால விஷ்ணுவாசுதேவன் நம்பூதிரி, ஆகியோர் சிறப்பு பரிகார பூஜை வழிபாடுகளை நடத்தி வழிபட்டனர்.
மேலும் 15 கோவில்களில்
பரிகார பூஜையின் தொடர்ச்சியாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு கிழ் செயல்படும் 10 கோவில்களிலும் மேலும் 5 கோவில்களிலும் பரிகார பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என்று சபரிமலை அய்யப்பன் கோவில் மக்கள் தொடர்பு அதிகாரி முரளி கோட்டைக்ககம் தெரிவித்தார்.
நடை திறப்பு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 21– ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உட்பட பூஜைகள் நடைபெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி: ஒப்பந்த பணிகளுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி திருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ப...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் க...
0 comments:
Post a Comment