Friday, September 05, 2014
கோவை கணபதி மோர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). இவர் தனியார் நிறுவன மேலாளர். இவர் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். வெங்கடாசலத்தின் பக் கத்து அறையில் தங்கியிருந்த 3 பேர் நேற்று முன்தினம் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தனர். எனவே சத்தத்தின் அளவை குறைத்து வைக்குமாறு வெங்கடாசலம் அவர்களிடம் கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் பீர் பாட்டிலால் வெங்கடாசலத்தை குத்தியுள்ளனர். படுகாயமடைந்த வெங்கடாசலத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்கு பதிவு செய்து கணபதியை சேர்ந்த ராஜேஷ்பாபு (23), வேல்ராஜ் (24), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (24) ஆகிய 3 பேரை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment