Friday, September 05, 2014
கோவை கணபதி மோர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). இவர் தனியார் நிறுவன மேலாளர். இவர் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். வெங்கடாசலத்தின் பக் கத்து அறையில் தங்கியிருந்த 3 பேர் நேற்று முன்தினம் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தனர். எனவே சத்தத்தின் அளவை குறைத்து வைக்குமாறு வெங்கடாசலம் அவர்களிடம் கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் பீர் பாட்டிலால் வெங்கடாசலத்தை குத்தியுள்ளனர். படுகாயமடைந்த வெங்கடாசலத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்கு பதிவு செய்து கணபதியை சேர்ந்த ராஜேஷ்பாபு (23), வேல்ராஜ் (24), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (24) ஆகிய 3 பேரை கைது செய்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment